உலக அளவில் 13.5 சதவிகிதக் குழந்தைகளும் இந்தியாவில் 15 முதல் 18 சதவிகிதக் குழந்தைகளும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக இருந்துவரும் இப்பிரச்னையின் தீவிரம் இன்று வேகமாக அதிகரித்து இருப்பது அச்சத்தை உண்டாக்குகிறது.
“ஆஸ்துமா பற்றிய விழிப்பு உணர்வே பலரிடம் இல்லை’’ எனக் கூறும் குழந்தைகள் நலம் மற்றும் ஆஸ்துமா அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன், ஆஸ்துமாவை வெல்லும் வழிமுறைகளை விரிவாக விளக்குகிறார்.
காரணங்கள் இவையெல்லாம்…





அறிகுறிகள்…


அலட்சியம் வேண்டாம்!
குழந்தைகளுக்கு அடிக்கடி அலர்ஜி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் வந்தால், அதற்கான காரணம் அறியாமல், `அது சாதாரண பிரச்னைதான்’ என அலட்சியமாக இருப்பதால்தான், பிற்காலத்தில் ஆஸ்துமா வினால் பெரிய அளவில் பாதிப்புகள் உருவாகின்றன.
இப்படி குழந்தைகள் தொடர் இருமல், மூச்சு விடுவதில் தொடர் அவதிக்குள்ளாவதை `cough variant asthma’ என்கிறோம்.

சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைத் தவிர, குழந்தைகளுக்குப் போடக்கூடிய தடுப்பூசிகளும் சில நேரங்களில் அலர்ஜியை உண்டாக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குழந்தைகளுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருத்துகள் அதிகமாக இல்லை. இப்போதுள்ள மருத்துவ வளர்ச்சியால் நிறைய தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. தொற்று நோய்கள் பெரும்பாலும் தடுக்கப்படுகின்றன என்றாலும், சில நேரங்களில் நோய்
எதிர்ப்புச் சக்தியானது மாறுபாடு அடைந்து, அவற்றின் உட்பிரிவு களின் நோக்கம் மாறும். `இம்யூன் டீவியேஷன்’ (immune deviation) எனப்படும், நோய்க் கிருமிகளைத் தாக்கும் பாதையில் இருந்து மாறுபாடு அடைந்து ஒவ்வாமையை உருவாக்கும் ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி அலர்ஜியை உண்டாக்கும். இது `ஹைஜின் ஹைபோதிசிஸ்’ (hygiene hypothesis) எனப்படுகிறது.
ஆரம்பகட்ட சிகிச்சைதான் மிக அவசியம்!
ஆரம்பக் காலத்திலேயே ஆஸ்துமா கண்டறியப்பட்டால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதேநேரம் நாள் கடந்த ஆஸ்துமா பிரச்னைக்கு சரியான சிகிச்சை கொடுத் தால் பிரச்னையின் வீரியத்தை முழுமையாகவே கட்டுப் படுத்தலாம். ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டவுடன் நோய் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கும் `ஸ்டீராய்டு இன்ஹேலர்’ (steroid inhaler), `பிரான்கோடை லேடர் இன்ஹேலர்’ (bronchodilator inhaler) மருந்துகளைப் பயன்படுத்தலாம். இக் கருவியானது சுருங்கியிருக்கும் மூச்சுக் குழலின் இயக்கத்தைச் சீர்செய்து எளிதாக மூச்சு விட உதவும்.
ஆரம்பக் காலத்திலேயே ஆஸ்துமா கண்டறியப்பட்டால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதேநேரம் நாள் கடந்த ஆஸ்துமா பிரச்னைக்கு சரியான சிகிச்சை கொடுத் தால் பிரச்னையின் வீரியத்தை முழுமையாகவே கட்டுப் படுத்தலாம். ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டவுடன் நோய் தீவிரம் அதிகமாகாமல் தடுக்கும் `ஸ்டீராய்டு இன்ஹேலர்’ (steroid inhaler), `பிரான்கோடை லேடர் இன்ஹேலர்’ (bronchodilator inhaler) மருந்துகளைப் பயன்படுத்தலாம். இக் கருவியானது சுருங்கியிருக்கும் மூச்சுக் குழலின் இயக்கத்தைச் சீர்செய்து எளிதாக மூச்சு விட உதவும்.
கண்டுகொள்ளப்பட்டாத, சிகிச்சை இல்லாத முற்றிய ஆஸ்துமா நிலையானது, உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. குறிப் பாகக் குழந்தைகளுக்கும் பெரியவர்களும் வரக்கூடிய ஆஸ்துமாவின் நிலையில் மாற்றங்கள் இல்லை. குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே உருவாகும் ஆஸ்துமாவுக்கு முறையான சிகிச்சைக் கொடுக்காதபட்சத்தில் அவர்கள் பெரியவர்களாக ஆன பிறகு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆஸ்துமாவால் பாதிப்புள்ள குழந்தைகள் இயல்பாக இல்லாமல் மூச்சு விடவே சிரமப்படுவது, சரியாகச் சாப்பிட முடியாமல் போவது, படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போவது, விளை யாட்டில் நாட்டம் இன்றி இருப்பது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். போதிய முன்னெச்சரிக்கை முறைகளைக் கடைப்பிடித்து ஆஸ்துமா வராமல் பார்த்துக்கொள்வதுடன், ஒருவேளை ஆஸ்துமா வந்திருப்பின் அதை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிந்து வெல்லலாம்’’ என்று நம்பிக்கையும் தருகிறார் மருத்துவர் ஸ்ரீதரன்.
குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்க…












ஆஸ்துமாவும் பருமனும்!
உலகம் முழுக்க ஆஸ்துமா மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் நிலையில், யூ.எஸ்.சி (University of South Carolina) ஆய்வு முடிவு இன்னும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. ஆஸ்துமா பாதிப்பு உள்ள குழந்தைகளில், 51 சதவிகிதத்தினர் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. ஆஸ்துமா பாதிப்புடன், பருமனும் ஏற்படுவதால், பிற்காலத்தில் வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு பிரச்னைகளும் ஏற்படலாம் என அறிஞர்கள் பலரும் ஆய்வு மூலம் முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.
குழந்தைப் பருவத்திலேயே ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட காற்று மாசுபாடு பிரதான காரணமாக இருப்பதுடன், அது சுவாச மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்னைகளை அதிக அளவில் ஏற்படுத்துவதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு முடிவில் பெரும்பாலான குழந்தைகள் போதிய உடல் உழைப்பைக் கொடுக்காததும், உடற்பயிற்சி செய்யாததும், உணவுக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்காததுமே குழந்தைப் பருவ ஆஸ்துமா பாதிப்புக்குக் காரணம் என்பதும் அறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவில் பெரும்பாலான குழந்தைகள் போதிய உடல் உழைப்பைக் கொடுக்காததும், உடற்பயிற்சி செய்யாததும், உணவுக் கட்டுப்பாடு முறைகளைக் கடைப்பிடிக்காததுமே குழந்தைப் பருவ ஆஸ்துமா பாதிப்புக்குக் காரணம் என்பதும் அறியப்பட்டுள்ளது.
Loading...
No comments:
Post a Comment