முகம், கன்னம் குண்டாக மற்றும் அழகாக மாற்ற டிப்ஸ் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Tuesday 10 October 2017

முகம், கன்னம் குண்டாக மற்றும் அழகாக மாற்ற டிப்ஸ்


பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகு தான். ஒரு சிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப் போய் இருக்கும்.பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும்.

நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். தூங்குகிறேன். ஆனால் என்ன செய்தும் கன்னம் குண்டாகவில்லையே என கவலைப் படுபவரா நீங்கள்? இங்கே சொன்ன டிப்ஸ் அத்தனையும் நிச்சயம் பலனளிக்கும். முயற்சித்து பாருங்கள்.இவர்கள் இந்த குறிப்புகளை பின் பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்!

முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது.
 முகம் குண்டாக வழி, கன்னம் உப்புவதற்கு, கன்னம் குண்டாக டிப்ஸ், கன்னம் ஒட்டி போதல், கன்னம் குண்டாக வேண்டுமா கன்னங்கள் குண்டாக, உடல் குண்டாக என்ன செய்ய வேண்டும்,  குண்டான முகம்

இதனால் முகத்தில் ஒரு வித பொலிவு கிடைக்கும்.

மிதமான சுடு நீரில் சிறிதளவு  உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.

மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும்.

தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு,  முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசிவிட்டு, மீதி மூன்று பருப்பையும் சாப்பிட வேண்டும்.

தோலில் எண்ணெய் பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச் சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதை போட்டு கன்னம் தங்கம் போல் மின்னும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும்.

தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணையுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வர, ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

தேன் அல்லது நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

ஆப்பிள், கேரட் ஜூஸ்
சில துண்டு ஆப்பிள் மற்றும் கேரட் சேர்த்து ஜூஸாக்கி தினமும் குடித்து வந்தால் கன்னங்கள் குண்டாகி மினுமினுப்பை பெறும்.

பால் - 1 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், பார்லித்தூள் - 1 டீஸ்பூன் ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும்.

அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண்களை சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்.

உங்கள் கன்னம் வெண்மை பொலிவுடனும் மற்றும் முகம் பளபளப்புடனும் இருக்கும்.

முகம் குண்டாக வழி, கன்னம் உப்புவதற்கு, கன்னம் குண்டாக டிப்ஸ், கன்னம் ஒட்டி போதல், கன்னம் குண்டாக வேண்டுமா
கன்னங்கள் குண்டாக, உடல் குண்டாக என்ன செய்ய வேண்டும்,
குண்டான முகம்

Loading...

1 comment:

  1. Mugam sirithaka ullathu epati Periya mugama maruvathu

    ReplyDelete