சர்ஜரிக்கு முன் டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கேள்விகள் - Thagaval Book

Tamil educational blog. Antharangam, udalnalam, GK in Tamil

Tuesday, 18 April 2017

சர்ஜரிக்கு முன் டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கேள்விகள்


சர்ஜரிக்கு முன் டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கேள்விகள்


1. ஏன் எனக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்?
2. எப்படி அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது?
3. மாற்று அறுவைசிகிச்சை இருக்கிறதா?
4. அறுவைசிகிச்சையின் பலன், அபாயங்கள், பக்கவிளைவுகள் என்னென்ன?
5. என்ன விதமான அனஸ்தீசியா தரப்போகிறீர்கள்?
6. அறுவைசிகிச்சைக்கு முன்னர், என்ன மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?
7. அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய நடைமுறைகள் என்னென்ன?
8. நீங்கள் எத்தனை அறுவைசிகிச்சை செய்துள்ளீர்கள் டாக்டர்?
9. அறுவைசிகிச்சைக்கான வசதிகள் மருத்துவமனையில் எப்படி இருக்கின்றன?
10. அறுவைசிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்… இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா?

ருத்துவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில்
சர்ஜரிக்கு முன் டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கேள்விகள்,  10 important question to ask before surgery, operation mun ketka vendiya kelvigal
மருத்துவர்களும் மக்களும் சகஜமாகப் பழகுவது இல்லை. மருத்துவர்களைப் பார்த்துப் பயப்படுவதும், தெய்வமாகப் பார்ப்பதும்தான் காலங்காலமாக இங்கு நடந்துகொண்டிருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இன்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் மருத்துவர்களும் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றி, விரிவாகப் பேசுவது கிடையாது. இதனால், மருத்துவம் பற்றிய புரிதலே மக்களுக்கு இருப்பது இல்லை. மருத்துவம் பற்றிய முழுமையாகத் தெரியாத நண்பர்களின் அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் நம்பிக் குழம்பிவிடுகின்றனர். இதனால், சரியான நேரத்தில், சரியான சிகிச்சை எடுக்காமல், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எப்போது மருத்துவமனைக்குச் சென்றாலும், எப்படிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும், டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, பிறகு சிகிச்சை எடுப்பதுதான் சிறந்தது. `கைராசியான டாக்டர்’, `நன்றாக சர்ஜரி செய்யும் டாக்டர்’ என்பதற்காகவெல்லாம், அரைகுறையாக கேட்டுவிட்டோ, எதுவுமே கேட்காமலோ அறுவைசிகிச்சை செய்ய ஒப்புக்கொள்ள வேண்டாம். கேள்வி கேட்க வேண்டும் என்றதும், அறுவைசிகிச்சை அறைக்குள் போய் கேள்வி கேட்பது எனத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறும்போதே சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு நோயாளியின் உரிமை, கடமை. அறுவைசிகிச்சைக்கு முன் நோயாளிக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்களை, அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை 10 கேள்விகளில் அடக்கிவிடலாம். அவை…
1. ஏன் எனக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்?
மூட்டு மாற்று அறுவைசிகிச்சையோ, கண்புரை அறுவைசிகிச்சையோ, உடலின்  எந்தப் பகுதி பாதிக்கபட்டிருந்தாலும், அறுவைசிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவர்கள் சொன்னால், `ஏன் அறுவைசிகிச்சை செய்தே ஆக வேண்டும்… எப்போது செய்துகொள்ள வேண்டும்… உடனே செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பின், அதற்கான அவசியம் என்ன?’ என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
2. எப்படி அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது?
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் முன்னேறி வரும் சூழ்நிலையில், அறுவைசிகிச்சை முறையிலும் பல மாற்றங்கள் வந்துவிட்டன. வயிற்றைப் பெரிதாகக் கிழித்துச் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள், தற்போது பெரும்பாலான இடங்களில் இல்லை. சிறு துளை அறுவைசிகிச்சை, லேசர், எண்டோஸ்கோப்பி என, பல்வேறு விதமான நவீன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில், மருத்துவர் எந்த முறையில் அறுவைசிகிச்சையை செய்யப்போகிறார் எனக் கேட்டுத் தெளிவுபெற வேண்டும். குறிப்பிட்ட
முறையில் ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபரின் அனுபவங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
3. மாற்று அறுவைசிகிச்சை இருக்கிறதா?
இந்தியாவில், மருத்துவ சிகிச்சைகளுக்குப் பஞ்சமே கிடையாது. அலோபதி, ஹோமியோபதி. நேச்சுரோபதி, சித்தா, ஆயுர்வேதா, அக்குபஞ்சர் எனப் பல சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவைசிகிச்சை செய்துகொள்ள நினைப்பவர்கள், மாற்று மருத்துவத்தில் குறிப்பிட்ட நோய்களுக்கு ஏதேனும் தீர்வு இருக்கிறதா, அது தற்போதைய உடலின் சூழ்நிலைக்குச் சரியாக இருக்குமா எனக் கேட்டுத் தெளிவுபெறுங்கள். அறுவைசிகிச்சைக்குப் பதில், மாத்திரை, மருந்துகள், வாழ்வியல்முறை மாற்றம் போன்றவற்றால் அறுவைசிகிச்சையைத் தவிர்க்க முடியுமா அல்லது அறுவைசிகிச்சையைக் குறிப்பிட்ட காலம் தள்ளிப்போட முடியுமா என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
4. அறுவைசிகிச்சையின் பலன், அபாயங்கள், பக்கவிளைவுகள் என்னென்ன?
அறுவைசிகிச்சை செய்வதால், உடலுக்கு  என்னென்ன பலன்கள் கிடைக்கும்… அதற்குப் பின் மீண்டும் தொல்லை ஏதாவது வருமா… முழுமையாக பிரச்னையிலிருந்து மீண்டுவிட முடியுமா… என்னென்ன பக்கவிளைவுகள் வரும்… அவற்றை எப்படிக் கையாளுவது… அறுவைசிகிச்சை நிரந்தத் தீர்வு தருமா… தற்காலிகத் தீர்வுதானா என்பதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
5. என்ன விதமான அனஸ்தீசியா தரப்போகிறீர்கள்?
அறுவைசிகிச்சை செய்யும்போது, `அனஸ்தீசியா’ எனும் மயக்க மருந்து கொடுக்கப்படும். மயக்க மருந்துகளில் பல வகைகள் இருக்கின்றன. உங்களுக்கு, உடலில் எந்தவிதமானப் பிரச்னைக்கு அறுவைசிகிச்சை தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்ப, மயக்க மருந்துகள் தரப்படும். அதைத் தருவதற்கு எனப் பிரத்யேக மருத்துவர் இருப்பார். நீங்கள், எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கப் போகிறீர்களோ, அந்த மருத்துவமனையில் உள்ள அனஸ்தீசியா சிறப்பு நிபுணரைச் சந்தித்து உங்களுக்குக் கொடுக்கப்படும் மயக்கம் மருந்துகள் பற்றியும், அதன் தீவிரம் பற்றியும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
6. அறுவைசிகிச்சைக்கு முன்னர், என்ன மாதிரியான விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்?
ஒவ்வொருவிதமான அறுவைசிகிச்சைக்கு முன்பும், நோயாளிகள் அன்றைய தினமோ, அதற்கு முந்தைய வாரமோ சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. உதாரணமாக, வயிற்றுப் பகுதியில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு, அறுவைசிகிச்சை செய்யும் நாளில் சாப்பிடக்கூடாது என்பார்கள். அதுபோல உங்களுக்கான அறுவைசிகிச்சைக்கு என்ன மாதிரியான பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், ஏதேனும் டயட் தேவையா, வாழ்வியல்முறையில் மாற்றம் தேவையா போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
7. அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய நடைமுறைகள் என்னென்ன?
அறுவைசிகிச்சை செய்து கொண்ட பின்னர், எந்த உணவை உண்ண வேண்டும் என்பதில் ஆரம்பித்து, எப்படி செயலாற்ற வேண்டும் என்பது வரை பல கட்டுப்பாடுகள் இருக்கும். அறுவைசிகிச்சை முடிந்து கண்விழித்த பிறகு, மருத்துவர் சொல்லும் நடைமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு ஏற்ப, மனதளவிலும் பொருளாதார அளவிலும் தயாராக வேண்டும். உதாரணத்துக்கு, பல் பிடுங்கினால், ஒரு நாளைக்கு வாய் கொப்பளிக்கக்கூடாது; சூடாக எதையும் சாப்பிடக் கூடாது. மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், தரையில் உட்காரக் கூடாது என ஒவ்வொரு சிகிச்சைக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கும். எனவே, அறுவைசிகிச்சைக்கு முன்னரே, இத்தகைய தவல்களை அறிந்து கொள்வது நல்லது.
8. நீங்கள் எத்தனை அறுவைசிகிச்சை செய்துள்ளீர்கள் டாக்டர்?
அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது. அந்த மருத்துவரிடம், அவர் இதற்கு முன் எத்தனை அறுவைசிகிச்சை செய்திருக்கிறார் என்பதைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். உங்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சையில் அவர் தேர்ந்தவரா, எப்படிப்பட்டவர் போன்ற சந்தேகங்களைக் கேட்க வேண்டும்.
9. அறுவைசிகிச்சைக்கான வசதிகள் மருத்துவமனையில் எப்படி இருக்கின்றன?
மருத்துவமனையில் உங்களுக்கு அறுவைசிகிச்சை எந்தமுறையில் செய்யப்படுகிறதோ, அதற்கு ஏற்ப உபகரணங்கள் இருக்கின்றனவா என்பதைக் கேட்டு, பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய மருத்துவமனையாக இருந்தாலும், அதில் தேவையான வசதி இருக்கிறதா என்பதை ஆராய்வது நல்லது. ஏனெனில், சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் வெள்ளத்தில் மின்சாரம் இன்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள் செயல் இழந்துவிட்டன. அதை  நினைவில் கொள்ளுங்கள். அது மட்டும் அல்ல; எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ முதலான பல பரிசோதனைகள் செய்வதற்கு, அந்தந்தத் துறையில் தேர்ச்சிபெற்றவர்கள் இருக்கிறார்களா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
10. அறுவைசிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்… இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்குமா?
உங்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு  எந்தெந்தக் காரணங்களுக்காக எவ்வளவு செலவாகும்… ஒட்டுமொத்தமாக தோராயமாக எவ்வளவு பில் வரும்… நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், க்ளெய்ம் கிடைக்குமா… அதிகபட்சம் எவ்வளவு க்ளெய்ம் கிடைக்கும்… கிளெய்ம் கிடைக்க என்னென்ன செய்ய வேண்டும்… இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் போக மீதி எவ்வளவு பணம் செலவாகும்… அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் என்னென்ன மாத்திரை, மருந்துகளைச் சாப்பிட வேண்டும்… அவற்றுக்கு எவ்வளவு செலவாகும்… உள்ளிட் டவற்றைக் கேட்டுத் தெளிவுபெறுங்கள். அறுவைசிகிச்சை முடிந்த பிறகு, எத்தனைமுறை ஃபாலோஅப் செய்ய வர வேண்டியதிருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சர்ஜரிக்கு முன் டாக்டர்களிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய 10 கேள்விகள்,  10 important question to ask before surgery, operation mun ketka vendiya kelvigal 

Loading...

No comments:

Post a Comment