கருத்தரிப்பை தடுக்க இனி ஆணுறை, கருத்தடை தேவையில்லை.. இது இருந்தாலே போதும். ஓராண்டுக்கு கவலை இல்லை.
காண்டமா? ‘நோ’ சொல்லும் துணை… உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’ என்னவாகும்? உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி…ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’. ஆச்சரியமா இருக்கா? முதலில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அறிவியலுக்கு!கரையக்கூடிய தன்மை உடையது என்பதால், விரைவான கருத்தடைக்கு உகந்தது. இதனை ஊசிமூலம் ஆண் இனப்பெருக்க குழாயில் செலுத்தும் போது விந்தணுக்கள் உற்பத்தியை உடனடியாக தடைசெய்வதோடு, ஒரு வருடம் வரை பாதுகாப்பளிக்கும்’’என்கிறார் வாலர்.
‘வாஸல் ஜெல்’ பற்றிய நம் சந்தேகத்தை ஆன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் ஸ்ரீதேவ் பரதனிடம் கேட்டோம். “இது ஒரு நல்ல கண்டுபிடிப்புதான். இப்போது ஆண்களுக்கு காண்டம் மற்றும் வாசக்டமி மட்டுமே கருத்தடைக்குத் தீர்வாக இருந்து வருகிறது. இதில், வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது, நிரந்தரமாகவே இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்துக்காகவே ஆண்கள் விரும்புவதில்லை. செக்ஸில் ஈடுபடும் போது காண்டம் உபயோகிப்பதால், முழுமை பெற முடிவதில்லை என்ற அதிருப்தி வேறு. பெண்களுக்கோ, இப்போதுள்ள கருத்தடை மாத்திரைகள், மற்ற கருத்தடை சாதனங்கள் எல்லாமே பக்கவிளைவுகள் உண்டாக்குபவையாக இருக்கின்றன.
No comments:
Post a Comment